பெண்கள் சினேகமில்லாதவர்களா???

13 கருத்துரைகள்

சில நாட்களுக்கு முன் இந்தப் பதிவை படிச்சவுடனே பெண்களோட நட்பை பற்றியும் அதை அவங்க அணுகற முறை பத்தியும் எழுதனும்னு தோணுச்சு. தொடர்ந்து படிக்கும்முன் அந்த பதிவையும்(சின்ன பதிவுதான்) ஒரு எட்டு பாத்துருங்க…

பதிவுக்குள்ள போறதுக்கு முன்னே பெண்-பெண் நட்பைவிட பெண்-ஆண் நட்பில ஆண்களும் பெண்களும் உண்மையா இருப்பாங்கனு அந்த பதிவுல நண்பர் ஒருத்தர் பின்னூட்டமிட்டுருந்தாரு. அந்த கருத்துல எனக்கு உடன்பாடில்ல, நல்ல நட்பில பால் வித்யாசம் எல்லாம் இருக்காது. இருந்துச்சுன்னா அங்க நட்பை மீறி வேற எதாவது இருக்கும் :)

பொதுவாவே பெண்கள் மேல வைக்கற குற்றசாட்டு அவங்க நட்புல உண்மையா இருக்கமாட்டங்க, தோழிகள் மேலயே பொறாமைபடுவாங்க, நட்பை நெடுநாள் தொடரமாட்டாங்க, நீண்ட நாள் கழிச்சு தோழி/தோழர்களை பார்க்கும்போது பழைய நெருக்கத்தோட பழகமாட்டங்கன்னு அடுக்கிட்டே போவாங்க. ஆனா இதெல்லாம் எந்தளவுக்கு உண்மைன்னும் (அ) உண்மையாயிருந்தா அவங்க எந்தளவுக்கு அதுக்கு காரணங்கறதும் '?' ...

உண்மையா இருக்கறது/இல்லாதது, பொறாமைபடறது/படாதது எல்லாம் ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட குணங்கள், அதெல்லாம் இருபாலருக்கும் பொதுவானவை. அதயாரு பெண்களுக்கு பட்டா போட்டு வைச்சாங்கன்னு தெரியல.

உதாரணமா, பெண்கள் நண்பியோட நகை, ஆடை, அழகு-னு பொறாமைப்பட்டா, ஆண்களை பொறாமைப்படுத்தற விசயம் பக்கத்து வீட்டுக்காரனோட பைக், கார், தொழில் வளர்ச்சி-னு இருக்கும். பொறாமைப்படற விசயம் மாறாலாம், ஆனா உணர்ச்சி பொதுவானது.

உண்மையா இருக்கறது, இது கொஞ்சம் சிக்கலான விசயம்தான். உண்மையா இருக்கமாட்டாங்க-னு பெண்கள் மேல குற்றச்சாட்டு வர காரணம், இங்க பெரும்பாலான பெண்களுக்கு ஆணோடயோ, பெண்ணோடயோ நட்பை எந்த அளவுக்கு வைச்சுக்கணுங்கற எல்லை அவங்க வீட்ல இருக்கற அம்மாவாலயோ, அப்பாவாலயோ-தான் தீர்மானிக்கப்படுது. இதனாலயே அவங்க இயல்புக்கு மாறான செயல்களை பல நேரம் செய்ய நிர்பந்திக்கபடறாங்க. உதாரணமா எங்க வீட்ல ஃபோன் இல்லை, வீட்ல வேலை இருக்கு நேரத்திலயே வீட்டுக்கு போகணும், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை டூர் வரமுடியாது இப்படின்னு பல நேரங்கள்ல பெண்கள் சொல்ல காரணம் அவங்க மேல திணிக்கபடற கட்டுபாடுதான். அவங்க சொன்னது பொய்-னு தெரியும்போது அவங்க நட்புல உண்மையா இருக்கமாட்டாங்கனு குற்றம் சாட்டபடறாங்க.

பெண்-பெண் நட்பு ஆண்-ஆண் நட்பு அளவுக்கு நெருக்கமா இல்லாம போறதுக்கும் பெரும்பாலும் third party-தான் காரணம். எல்லாரோட நட்பும் Hi, Hello-னுதான் ஆரம்பிக்கும், காலபோக்கில நெருக்கமான நட்பா மாறும். அவங்க பழகின காலத்தை திரும்பிபார்க்கும்போது சந்தோசமான தருணங்கள் பல இருந்தாலும், சட்டுனு நினைவுக்கு வரது அவங்க நமக்கு தோளோடு தோள் கொடுத்த நேரங்கள்தான். அது நண்பனுக்காக சண்டைக்கு போனது, மன்னிப்பு கேட்டது, பண உதவி-னு எப்படி வேணா இருக்கலாம். இந்த மாதிரி வாய்ப்புகள் எத்தனை பெண்களுக்கு தரப்படுது.

நெடுநாள் கழிச்சு சந்திக்கும்போது அதே நெருக்கத்தோட பழகமாட்டங்க-ன்றது மேல பார்த்த பிரச்சனைகளோட நீட்சி-தான். பழகற காலத்திலயே அவங்க விருப்பபடி அவங்க நட்பை அமைச்சுக்க விடறதில்லை, அப்பறம் எங்க நட்பை புதிப்பிக்கறது. பெத்தவங்க வீட்ல கிடைக்காத சுதந்திரமா புகுந்த வீட்ல கிடைச்சிடப்போகுது(விதி விலக்கு உதாரணமாகாது).

பெண்களுக்கு புனிதபிம்பம் எழுப்பறது என்னோட நோக்கமில்லை. உணர்சிகள் எல்லாருக்கும் பொதுவானவை, கறுப்பாடு எல்லா இடத்திலயும் இருக்கும். எல்லாத்தையும் பொதுமைப்படுத்தறது ஆரோக்கியமான சிந்தனையா இருக்காது.

கடவுள் காதல் அழகு பணம் - நான்

6 கருத்துரைகள்

ஒரு மணி நேரம் பேச ஒரு வாரம் தயாராகணும், பத்து நிமிசம் பேச ஒரு மாதம் தயார்படுத்திக்கணும்-னு சொல்லுவாங்க. அதுமாதிரி நாலஞ்சு வரிகள்ல இவ்வளவு பெரிய விசயங்களை எழுதுவது எனக்கு கைவரப்படாதது, முயற்ச்சிக்கறேன்.

கடவுள் உண்டா?

எதையுமே முயற்சிக்காம எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்னு சொல்ற சோம்பேறி ஆத்திகனாவோ, கடவுள் மறுப்பு மட்டுமே பகுத்தறிவு-னு நம்பற முட்டாள் நாத்திகனாவோ இல்லாம, கடவுளை நேசிக்கற பகுத்தறிவுவாதியா இருக்கவே விரும்பறேன்.

பணம் அவசியமா?

பணத்தை ஆகாத, விருப்பமில்லாத பொருளா சித்தரிச்சுட்டு, அதிக சம்பளம் கிடைக்கற வேலை தேடற கும்பல்ல நான் இல்லை.

எனக்கு பணம் ரொம்ப பிடிக்கும். ஆனா பணம்தான் நமக்காக வேலை செய்யணும், நாம பணத்துக்காக வேலை செய்யக்கூடாது. செய்யுற வேலையை முழு ஈடுபாட்டோட புத்திசாலித்தனமா செஞ்சா பணம் தானா தேடிவரும்.

அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

என் அம்மா, அம்மாவோட கோலம், மலழையின் சிரிப்பு, நீல வானம், கடல் அலை, பச்சை வயல், கேரள பெண்களோட தலைப்பின்னல் மற்றும் சந்தனக்கீற்று நெற்றி, எங்க இருக்கான்னே தெரியாத என்னவள், அப்பறம் நான் :) (கடைசியா திருஷ்டிக்கு)

எல்லாமே நிரந்தரமானது, அகக்கண்ணால பார்க்கும்போது.

காதல் மனிதனுக்கு அவசியமா?

கண்டிப்பா, காதல் எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கும், சாதி மத சமுதாய ஏற்ற தாழ்வுகளை களையவும் காதல் தான் மிக வலுவான ஆயுதம்-னு நான் நம்பறேன்.

ஆனா பெற்றோர்களை சம்மதிக்கவைச்சு கல்யாணம் பண்ண திராணி இருக்கறவங்க மட்டும்தான் காதலிக்கணும்.

தொடர்பதிவுக்கு அழைத்த கோபி-ஜி க்கு நன்றி.

நான் அழைப்பவர்கள்:

குறை ஒன்றும் இல்லை

புவனேஷ்

தேவன் மாயம்

என்னது நான் ரவுடியா???

14 கருத்துரைகள்


என்னது நான் ரவுடியா??? -- அன்புடன் அருணா மேடம் எனக்கு விருது தந்திருந்ததை பார்த்தபோது இப்படி யாரோ என்கிட்ட சொன்ன மாதிரியே இருந்தது :)

அவங்க வலைப்பக்கத்துக்கு எதார்த்தமா போனபோதுதான் விருது பத்தி பதிவு போட்டுருந்ததை பார்த்தேன். அதுல என் பேரையும் பார்த்துட்டு நெஜமா என்னால நம்ப முடியல(பேரை க்ளிக் பண்ணி என்னோட வலைப்பக்கத்துக்குதான் வருதான்னு கன்ஃபார்ம் வேற பண்ணிக்கிட்டேன் :)).

பிரின்ஸ்பால் மேடத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி, நெகிழ்ந்து மகிழ்ந்தேன்.(ஜோதிகா மாதிரி ஆயிருச்சோ)

கொடுத்ததே கொடுத்தாங்க அப்படியே எதுக்குனு சொல்லிருக்கலாம், அவங்கவங்களுக்கு பிடிச்சதை எடுத்துகோங்கப்பானு சொல்லிட்டாங்க. சரி மொத்தம் ரெண்டு வகைனு நெனைக்கறேன். ஒண்ணு சுவாரசியப் பதிவர் இன்னொண்ணு நட்பு விருது.

நாம எழுதறதே ரொம்ம்ம்ம்ப கம்மி இதுல எங்கங்க சுவாரசியமா எழுதறது. அதுவுமில்லாம சுவாரசியமா எழுத இதுவரைக்கும் முயற்சி கூட செஞ்சதில்லை. முயற்சியே பண்ணாத ஒரு விசயத்துக்கு ஆசைப்படறது ரொம்ப தப்புல்ல, அதனால அது நமக்கு வேணாம்.

நட்பை துறந்த நண்பனை இழந்த சோகமான ஒரு சமயத்துலதான் இந்த வலைப்பூவே ஆரம்பிச்சேன், நட்பைத் தேடி. அந்த வகையில இந்த மாதிரி ஒரு விருதை வாங்கறதுல ரொம்ப ரொம்ப சந்தோசம். அதனால நாம நட்பு விருதையே பிடிச்சுக்கலாம்.

இவ்விருதின் சட்டப்படி நானும் கீழ்காணும்(நாலு பத்தி எழுதினாவே பரிட்சை நியாபகம் வந்துருது) நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.

கிரி – தலைவரோட சக ரசிகராத்தான் அறிமுகம். ஆனா அவரோட வலைப்பக்கத்துக்கு போனபோது எல்லா பின்னூட்டத்துக்கும், குறிப்பா காட்டமான எதிர்கருத்துக்கு கூட பணிவோட பதிலளித்தவிதம்தான் கிரி-ஜியை ரொம்ப பிடிக்க காரணம். அதுவுமில்லாம ஒரு சிலரை ஏன் பிடிக்குதுன்னே தெரியாம கன்னாபின்னானு பிடிக்கும், இவரையும் அப்படித்தான்.

கோபி – இவரும் தலைவரோட ரசிகராத்தான் அறிமுகம். இவரோட பின்னூட்டங்கள் ரசிக்கும்படி இருக்கும், அதெல்லாம் பார்த்துட்டு நம்ம வயசுதான் இருக்கும்னு தப்பு கணக்கு போட்டுட்டேன் :) உங்ககிட்ட யாராவது புள்ளிராஜா யாருன்னு கேட்டா நீங்க தைரியமா இவரை கைகாட்டலாம். ஹலோ ஹலோ அவ்ளோ புள்ளி விபரம் தருவாருன்னு சொன்னேங்க. அவர் வலைப்பக்கத்தை பார்த்தா நீங்களே ஒத்துக்குவீங்க.

டுபுக்கு – எனக்கு தமிழ் வலைப்பக்கங்கள் மேல ஆர்வம் வர காரணமே ரெண்டு பேரோட வலைப்பூக்கள்தான், அதுல அண்ணாரும் ஒருவர். தனிப்பட்ட முறைல ஒரு மின்னஞ்சல் பரிமாற்றம் கூட இல்ல, ஆனா கணிணி திரையை மூடிய பின்பும் நினைக்கும் ஒருத்தர்.

நர்சிம் – மேல சொன்ன அந்த இன்னொருத்தர் நர்சிம்-ஜி தான். அண்ணாருக்கு சொன்ன அனைத்தும் இவருக்கும் பொருந்தும். நான் ஜனரஞ்சக வார இதழ்கள் வாங்கி பல வருசமாச்சு, ஆனா இவரோட கதை முதல்முறையா(அப்படினுதான் நினைக்கறேன்) ஆ.வி- ல வந்ததுனு அந்த வாரம்(மே 13) மட்டும் வாங்கினேன். இன்னும் அந்த புத்தகத்தை பத்திரமா வைச்சிருக்கேன்.

கைப்புள்ள – பதிவுலகத்துல எனக்கு கிடைச்ச முதல் பாராட்டு இவருகிட்டருந்துதான். இவரோட சில பதிவுகள் எம்மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும், நானே எழுதினதுபோல. ஆனா அவரு என்னை மாதிரி இல்லாம கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே நல்லா எழுதிருப்பாரு :)

மேல சொன்ன யாரோடயும் எனக்கு நெருக்கமா பழக இதுவரைக்கும் வாய்ப்பு கிடைக்கல, ஆனா நான் பழகணும்னு ஆசைபடறவங்க. மற்ற நாலு பேருக்காவது இப்படி ஒருத்தன் இருக்கான்னு தெரியும், ஆனா நர்சிம்-ஜிக்கு வலையுலகத்துல பாசகி-னு ஒரு ஜீவன் உலாத்துதுனாவது தெரியுமான்னு அறியேன். இதன் மூலமாவது என்னோட இருப்பை காட்டிக்கறேனே :)

என்ன மாதிரி காலேஜ் பதிவரையும்(அதாங்க எப்பவாது பதிவு போடறவங்க) மதிச்சு(?) விருது தந்த அருணா மேடத்துக்கு மீண்டும் மீண்டும் நன்றி!!!